Publish Date: Tue, 21 Oct 2008 (16:19 IST)
Updated Date: Tue, 21 Oct 2008 (16:19 IST)
தனது அடுத்தப் படத்தை கோவாவில் எடுக்கும் வெங்கட்பிரபு, அதற்காக வெளிநாட்டு அழகிகளுக்கு வலை வீசியிருக்கிறார். வேலை வெட்டி இல்லாத நான்கு இளைஞர்கள் வெளிநாட்டு அழகிகளை மணக்கும் திட்டத்தோடு கோவா செல்கிறார்கள்.
இதே லட்சியத்தோடு நான்கு வெளிநாட்டு யுவதிகள் கோவா வருகிறார்கள். இந்த இரு லட்சிய கும்பலும் சந்திக்கும் போது ஏற்படும் கசமுசா களேபரங்கள்தான் கதையாம்.
நான்கு இளைஞர்களில் ஒருவராக பிரேம்ஜியை தேர்வு செய்துள்ளார் வெங்கட்பிரபு. மற்றவாகள் புதுமுகங்கள் என்கின்றன தகவல்கள். இப்போது வெளிநாட்டு யுவதிகள்தான் பிரச்சனை. நல்லதாக நாலு பேர் வேண்டும். இதற்கான தேடலில் தற்போது இறங்கியுள்ளார் வெங்கட்பிரபு.