Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷங்கர் எடுத்த நடவடிக்கை!

Advertiesment
ஷங்கர் எந்திரன் படப்பிடிப்பு
, செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (20:39 IST)
பிரேசிலில் பாடல் காட்சியை எடுத்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் ஷங்கர். சென்னை வந்ததும் முதல் வேலையாக மூன்று அசிஸ்டெண்டுகளை நீக்கியிருக்கிறார்.

ஏன்?

கடுமையான பாதுகாப்பை மீறி எந்திரன் படப்பிடிப்பு புகைப்படங்கள் பத்திரிக்கை மற்றும் இணையதளங்களில் வெளிவந்தது தெரியும். அது ஷங்கரை கடுமையாக பாதித்திருந்தது.

இதற்கு யார் காரணம் என்று அப்போதே விசாரணையை தொடங்கியவர், குறிப்பிட்ட மூன்று அசிஸ்டெண்டுகள்தான் காரணம் என்று கண்டுபிடித்துள்ளார். அதனால்தான் இந்த க‌ல்தா.

கறுப்பு ஆடுகளை களையெடுத்ததால் இனி புகைப்படங்கள் லீக் ஆகாது என்று நம்பலாம்.

Share this Story:

Follow Webdunia tamil