Publish Date: Wed, 24 Sep 2008 (20:05 IST)
Updated Date: Wed, 24 Sep 2008 (20:05 IST)
தேவையற்ற காண்ட்ரவர்ஸிகளால் தனது படங்களின் மெசேஜ் ஜனங்களை சென்று சேரவில்லை என இயக்குனர் சாமிக்கு வருத்தம்.
இவரின் சரித்திரம் படம் தமிழர்களின் வீர விளையாட்டின் சிலம்பாட்டத்தை பற்றியது. படத்தை ப்ரேம் பை ப்ரேம் இழைத்து உருவாக்குகிறவர், அடுத்து சதம் என்ற படத்தை இயக்குகிறார்.
விளையாட்டுத் துறையில் ஊடுருவியிருக்கும் லஞ்சமும், கள்ளத்தனங்களும், அதனால் உண்மையான வீரர்கள் புறக்கணிக்கப்படுவதும் சதம் படத்தின் மையக்கரு.
ஜனநாதனின் பேராண்மையும் இதே பிரச்சனையை லேசாக தொட்டுச் செல்கிறது. கலாச்சாரத்தை உரசிப் பார்த்த சாமி, விளையாட்டுத் துறையை கையிலெடுக்கிறார். விளைவு நல்லதாக இருக்கும் என்று நம்பலாம்!