Publish Date: Sat, 20 Sep 2008 (18:29 IST)
Updated Date: Sat, 20 Sep 2008 (17:43 IST)
புழல் சிறைக்கு சென்று வந்தபின் புளோராவிடம் நிறைய மாற்றங்கள். தேவைக்கு மீறி பேசுவதில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று ஒடுங்கி விடுகிறார்.
குசேலன் படத்தை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் உச்சகட்டம். புளோரா - ஜாய்மோன் நடிக்கும் இப்படத்தில், மயூரி என்ற பெயர் இடம்பெற்றால் ஆச்சரியப்படாதீர்கள். புளோராவின் புதிய பெயர்தான் மயூரி.
புழல் சிறை சென்றபின் அனைத்தும் புதிதானது போல் உணர்வதால் இந்தப் பெயர் மாற்றமாம். கருணாஸின் திண்டுக்கல் சாரதியிலும் மயூரி என்ற பெயரிலேயே நடித்து வருகிறார் புளோரா.
பெயர் மாற்றம் புளோரா வாழ்வில் பிரகாசத்தை தரட்டும்!