Publish Date: Mon, 15 Sep 2008 (13:51 IST)
Updated Date: Mon, 15 Sep 2008 (13:51 IST)
மல்லிகா ஷெராவத் கவர்ச்சி காட்டுவார் என்று மட்டும்தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் இயற்கை அழகையும் ரசிப்பவர்.
அழகான இடங்களைத் தேடித் தேடி படம் பிடிக்கக் கூடியவரும்தான். உலகமே அவர் நடிப்பை ரசிக்க, அவர் இயற்கையின் அழகை ரசிக்கிறார்.
தற்போது கடலின் அழகை ரசிப்பதற்காக அழகான மூங்கில் மற்றும் களிமண்ணால் ஒரு குடிசையை மலைக் குன்றின் மீது கட்டி வருகிறார். அந்த குடிசையில் படுத்துக்கொண்டால் இதமான கடலின் உப்புக்காற்றும், ரம்யமான கடல் வாசமும் வருடுமாம்.
அப்படி கடலை ரசிக்கும் அவரை ரசிக்க யாருக்கும் அனுமதி கிடையாதாம். இந்த குடிசை ஆஸ்ட்ரேலியா, கோவா... என்றெல்லாம் இல்லை. நமது சென்னை கோவளத்தில்தான்.
என்னதான் ஆடி, கவர்ச்சி காட்டி சம்பாதித்தாலும்... ஓய்வை இப்படி ஆசைப்பட்ட மாதிரி அனுபவக்காமல் என்ன வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்?