Publish Date: Tue, 09 Sep 2008 (20:42 IST)
Updated Date: Tue, 09 Sep 2008 (20:41 IST)
சுராஜ் - அர்ஜுன் கூட்டணியில் தயாரான மருதமலை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி ஒன்றிணைகிறது.
தனுஷ் நடிப்பில் படிக்காதவன் படத்தை இயக்கிவரும் சுராஜ், அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. கார்த்தி லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் சின்ன இடைவெளி. இந்த இடைவெளியில் மீண்டும் ஒன்றிணைகிறது சுராஜ் - அர்ஜுன் கூட்டணி.
ஜாம்பவான் படத்தை தயாரித்த இஎல்கே பிரேம்ஸ் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார்.