Entertainment Film Featuresorarticles 0809 08 1080908081_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்ணீர் விட்ட இசையமைப்பாளர்!

Advertiesment
இசையமைப்பாளர் டி இமான் துரை
டி. இமான்! பெயர் இடிஅமீனாக ஒலித்தாலும் இளகிய மனசு இவருக்கு. துரை இசை வெளியீட்டு விழாவில் அம்மா பற்றி பேசி அனைவரையும் கண்கலங்க வைத்தார் இமான்.

துரையில் ஆயிரம்... ஆயிரம் என்றொரு பாடல் வருகிறது. இதன் இரண்டாவது சரணத்திற்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். கடைசியில், தாயை போல வருமா... ஒரு தாயாய் வந்தாள் மனைவி என்று கச்சிதமாக வார்த்தை அமைய, கம்போஸிங்கை முடித்து ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்திருக்கிறார் இமான். வெளியே அவரது தந்தை மற்றும் மனைவி.

அம்மா பாடலை முடித்துவிட்டு வந்த என்னிடம் அம்மா இறந்த செய்தியை சொன்னார்கள் என்று கூறி, அம்மாவின் நினைவில் இடையிலேயே கண் கலங்கினார் இமான்.

அம்மாவின் ஆசிர்வாதத்தில் துரை படமும் பாடலும் வெற்றிபெறும் என்று அவர் கூறியது நிஜமாகும் என்பதை விழாவில் திரையிட்ட மூன்று பாடல்களுமே நமக்கு உணர்த்தின.

Share this Story:

Follow Webdunia tamil