Entertainment Film Featuresorarticles 0808 02 1080802058_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசியின் துணிச்சல்!

Advertiesment
சசி பூ பார்வதி
, சனி, 2 ஆகஸ்ட் 2008 (19:26 IST)
நவ்யா நாயர், பாவனா, அசின், மீரா நந்தன்... இந்த வரிசையில் 'பூ' பார்வதி!

இவர்கள் அனைவரும் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர்கள். பேசினால் சொந்தக் குரலில்தான் பேசுவோம் என அடம்பிடித்து சாதித்தவர்கள்.

சசியின் பூ பார்வதிக்கு முதல் படம். முதல் படத்திலேயே சொந்தக் குரலில் பேசி நடிக்க வாய்ப்பு கிடைப்பது பெருமாள் அருளிய வரம்.

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய் கதையையே பூ என்ற பெயரில் எடுத்து வருகிறார் சசி. சரிசல் மண்ணின் மெல்லிய காதல் கதையான இதில் ஸ்ரீகாந்த் ஹீரோ.

மண்ணின் மைந்தர்களுடன் மண்ணைப் பற்றி எழுதும் சில எழுத்தாளர்களையும் இதில் நடிக்க வைத்துள்ளாராம் சசி. படத்தின் யதார்த்தம் சிதையாமலிருக்க பார்வதியையே டப்பிங் பேச வைத்துள்ளார்.

பூவை பற்றிய சேதிகளிலேயே நல்ல மணம்!

Share this Story:

Follow Webdunia tamil