Publish Date: Fri, 11 Jul 2008 (14:23 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:41 IST)
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இளையராஜாவும், ஏ.ஆர். ரஹ்மானும் கலந்த கலவை என்று இயக்குனர்களின் பாராட்டு பெற்ற செல்லப்பிள்ளை.
தனது மாமா இசைப் புயலைப் போல் இவரும் ஒரு இரவுப் பறவைதான். கம்போசிங், ரெக்கார்டிங் எல்லாம் இரவுப் பொழுதுகளில்தான் செய்து முடிக்கிறார்.
குசேலனுக்கு இசையமைத்த பின்பு ஒட்டுமொத்த தமிழகத்தின் காதும் இப்போது பிரகாஷை நோக்கிதான். இசையமைப்பதோடு மட்டுமின்றி இப்போது பாடகராகவும் பரிணமிக்கத் தொடங்கியுள்ள இந்த இளம்புயல், வசந்த பாலன் இயக்கும் 'அங்காடித்தெரு'வில் கண்ணில் தெரிகின்ற வானம்... என்ற பாடலையும் பாடியுள்ளார்.
பாட்டுக்கு அடுத்து என்? நடிப்பு. 'குசேலன்' படத்தின் 'சினிமா சினிமா' என்ற பாடலின் நடுவே தோன்றி நடிப்புக்கும் அடியெடுத்து வைக்கிறார் இந்த அதிரடி இசையமைப்பாளர்.