Publish Date: Wed, 09 Jul 2008 (20:01 IST)
Updated Date: Wed, 09 Jul 2008 (20:01 IST)
நேற்று கோடம்பாக்கம் முழுக்க அதே பேச்சுதான். நான்கு பேர் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தாலே விஷயம் இதுதான் என்று எட்டியிருந்து சொல்லிவிடலாம். நடிகை சதா கடத்தப்பட்டுவிட்டார் என்பதே அந்த செய்தி.
பாலிவுட்டில் கல்பலி, கிளிக் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சதாவுக்கு கோலிவுட்டில் இருந்து தொலைபேசி அழைப்புகள். அம்மணியின் மொபைலோ நாட் ரீச்சபிளில். என்ன செய்வது? என கையை பிசைந்து கொண்டிருந்த கோலிவுட் வட்டாரத்துக்கு கடைசியில் சதாவின் அப்பா சையதுதான் ஆறுதல் தந்தார்.
"என் மகள் சதா கடத்தப்படவில்லை. என்னோடுதான் இருக்கிறார். என் மகளைப் பற்றிய இந்த வதந்தி அவளின் புகழைக் கெடுக்க யாரோ செய்த சதி" என்று அறிக்கை தந்து திரைத்துறையினர் வயிற்றிலும், ரசிகர்கள் வயிற்றிலும் ஒரே நேரத்தில் பாலை வார்த்துள்ளார்.