Publish Date: Tue, 08 Jul 2008 (19:58 IST)
Updated Date: Tue, 08 Jul 2008 (19:58 IST)
இயக்குநர் சீமானின் திரைப்படங்கள் புரட்சிகரமாய், சமுதாயக் கொடுமைகளின் மீது கோபம் கொண்டதாய் இருக்கும். சரி இருந்துவிட்டு போகட்டும். அந்தக் கோபத்தை மேடைகளில் வெளிப்படுத்த ஆரம்பித்தால் என்ன ஆகும்?
விஷயம் இதுதான், இயக்குனர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற கலை இலக்கிய இரவு கூட்டத்தில் தனது கோபத்தை இந்த மத மூடநம்பிக்கைகள் மீதும், இந்து மதக் கோயில்களில் நடைபெறும் நடைமுறைகளைப் பற்றியும் விமர்சித்துள்ளார்.
இது பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களிடம் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தவே, கிறிஸ்தவரான சீமான் எப்படி தங்கள் மதத்தை அவமானப்படுத்தும் விதமாகப் பேசலாம் என்ற ரீதியில் சீமானைக் கண்டித்து துண்டுப் பிரசுரங்கள், ஊர்வலங்கள், கண்டனக் கூட்டம் என்றபடி இறங்கியுள்ளனர்.
கலைஞர்கள் தனது உணர்வுகளை படைப்பில் வெளிப்படுத்த வேண்டும், மேடையில் முழங்க அரசியல்வாதிகள் இருக்கிறார்களே! என்பதுதானே நமது சமூக நிலவரம்.