Publish Date: Wed, 02 Jul 2008 (20:29 IST)
Updated Date: Wed, 02 Jul 2008 (20:29 IST)
தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணவம்சியை காதலித்து திருமணம் செய்து குழந்தை குடும்பம் என செட்டிலான ரம்யா கிருஷ்ணன் மீண்டும் நடிக்க வருகிறார்.
திருமணத்திற்குப் பிறகு தொலைக்காட்சியோடு தனது எல்லையை சுருக்கிக் கொண்டார் ரம்யா கிருஷ்ணன். தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகள் தயாரிக்க சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் தொடங்கினார்.
நடுவில் நாலாதிசையிலிருந்தும் சினிமா அழைப்புகள். சமீபமாக சண்டை படத்தில் நதியா நடித்த வேடத்தை செய்ய ரம்யா கிருஷ்ணனையே அணுகினர். அவர் மறுத்த பிறகே நதியா ஒப்பந்தமானார்.
சினிமாவில் நடிப்பதில்லை என்ற ரம்யா கிருஷ்ணனின் கடின முடிவை கரைத்துள்ளார் சுரேஷ் கிருஷ்ணா. இவர் பரத்தை வைத்து இயக்கும் ஆறுமுகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். இது ஏறக்குறைய படையப்பா நீலாம்பரி போன்ற கேரக்டராம்!