Publish Date: Sat, 14 Jun 2008 (17:25 IST)
Updated Date: Sat, 14 Jun 2008 (17:25 IST)
காடும் காடு சார்ந்த கதை பேராண்மை. இதன் நாயகன் துருவன் (ஜெயம் ரவி) பிறப்பால் ஆதி திராவிடர். காட்டிலாகா அதிகாரியான அவர், தனது வேலைக்கு தடங்கலாக இருக்கும் தடைகளை எப்படி கடந்து வருகிறார் என்பது கதை.
தனிஷ்கா, லியா ஸ்ரீ, சரண்யா, வர்ஷா, வசுந்தரா என்று ஐந்து புதுமுகங்கள். ஐவருமே விளையாட்டு வீராங்கனைகள்.
புறத்தை வெல்வது ஆண்மை, அகத்தை வெல்வது பேராண்மை. தொல்காப்பியத்தில் இடம்பெறும் இந்த வார்த்தைக்கேற்ப, மற்றவர்களின் மனங்களை துருவன் எவ்வாறு வெல்கிறான் என்பதை சொல்வதால் படத்திற்கு பேராண்மை என்று பெயராம்.
ஜனநாதனின் படம் தமிழர்களின் அகத்தை வெல்லட்டும்!