Publish Date: Wed, 11 Jun 2008 (18:36 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:40 IST)
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார். அதனால்தானோ என்னவோ, திருவாசகம் படத்தில் ஒப்பந்தமான அனைவரும் உருகி ஓடி விட்டனர்.
நவ்தீப், பூர்ணிதா நடிப்பதாகத்தான் திருவாசகத்தை அறிவித்தார்கள். ஆர்ட் டைரக்டர் ஆரோக்கியராஜ் அரங்கமைக்க பிரமாண்டமாகப் போட்டோ செஷன் நடத்தினர். பெரிய அளவில் விளம்பரமும் செய்யப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டங்கள் முடிவதற்குள் படத்தில் இருந்து பூர்ணிதா தூக்கப்பட்டார். பிறகு ஆரோக்கியராஜ். அடுத்து டிஸைனர்.
ஒவ்வொருவரையாக படத்தில் இருந்து நீக்கிக்கொண்டே வந்தனர். உங்கள் படம் வேண்டாம், உழைத்ததற்குக் காசு கொடுங்கள் என்று சங்கத்தில் புகார் கொடுத்தார் ஆர்ட் டைரக்டர்.
தொடங்கும்போதே சொதப்பலாகிப்போன திருவாசகம் மீண்டும் திரும்பி வந்திருக்கிறது. ஆல்பத்தில் நடித்த ஆரியன் ராஜேஷ் ஹீரோ. காதலில் வரும் சரண்யா ஹீரோயின். இசை ஜாஸி கிப்ட்.
இந்தமுறை திருவாசகம் உருகாது என்று உறுதியளித்தார் இயக்குநர் ராஜா மோகன்.