Publish Date: Mon, 09 Jun 2008 (19:32 IST)
Updated Date: Mon, 09 Jun 2008 (19:32 IST)
புயலுக்கு முன் உள்ள அமைதியா? புயலடித்த பின்புள்ள மெளனமா? எதுவாக இருந்தாலும் சர்ச்சை, சண்டை என்றிருந்த தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்தில் பேரமைதி. இழுபறியில் இருந்த தேர்தலும் ஒருமனதாக முடிவுக்கு வந்துள்ளது.
நேற்று நடந்த சங்க பொதுக் குழுவில் பாரதிராஜா சங்கத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரதிராஜா அணி, போட்டி அணி, உதவி இயக்குனர்கள் அணி என சூலும் போல் பிரிந்து நின்றவர்கள் வேல் போல் ஒன்றிணைந்த மர்மம்தான் இன்னும் விடுபடவில்லை.
மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தலும் இதுபோல் அமைதியாக நடந்தால் நல்லது. இயக்குனர்களின் ஒற்றுமைக்கு அதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.