Publish Date: Sun, 08 Jun 2008 (16:15 IST)
Updated Date: Sun, 08 Jun 2008 (16:15 IST)
விஜயின் வில்லு பட ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மீது கவுன்சலில் புகார் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!
இவரது தயாரிப்பில் ரவிவர்மன் மாஸ்கோவின் காவிரி படத்தை புதுமுகங்களை வைத்து இயக்கினார். படம் இன்னும் முடியவில்லை.
ரவிச்சந்திரனின் புகாரின்படி படப்பிடிப்பு, டப்பிங், பின்னணி இசை என எதுவும் முடியவில்லை. இதனை முடித்துவிட்டு வேறு படத்துக்கு ரவிவர்மன் செல்லட்டும் என்கிறார் ரவிச்சந்திரன்.
கவுன்சில் விளக்கம் கேட்டதற்கு, வில்லு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு பதினைந்து நாட்களுக்குள் மாஸ்கோவின் காவிரி வேலைகளை ஆரம்பித்து விடுகிறேன் என்றிருக்கிறார் ரவிவர்மன். இந்த விளக்கத்தை கவுன்சில் ஏற்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் படப்பிடிப்பை தொடங்கிய முதல்நாளே பிரச்சனையை சந்தித்திருக்கிறது விஜயின் வில்லு.