Publish Date: Sun, 08 Jun 2008 (16:00 IST)
Updated Date: Sun, 08 Jun 2008 (15:59 IST)
தேனியில் நான் கடவுள் படப்பிடிப்பில் இருந்தபோது, கண்ணும் கண்ணும் படத்தைப் பார்க்க ஆசைப்பட்டார் பாலா. இயக்குனர் மாரிமுத்து எளிமையான கதையை இழைத்து... இழைத்து பொற்கொல்லரின் லாவகத்துடன் எடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதால் வந்த ஆர்வம்.
பாலா சென்னை வந்தபிறகு பிரசாத் லேபில் உள்ள திரையரங்கில் அவருக்கு பிரத்யேகமாக கண்ணும் கண்ணும் திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினாராம் இயக்குனர் மாரிமுத்து. இந்த திரையிடலின் போது வேறு சில இயக்குனர்களும் உடனிருந்தனர்.
மாரிமுத்துவின் புதிய படத்தில் பாவனா நடிக்கிறார். அவரும் கண்ணும் கண்ணும் படத்தைப் பார்த்திருக்கிறார். பாலாவால் மாரிமுத்துவின் பெயருக்கு மரியாதை சற்று கூடியிருக்கிறது.