Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாடாய் படுத்தும் அயன் வில்லன்!

பாடாய் படுத்தும் அயன் வில்லன்!
, வெள்ளி, 9 மே 2008 (19:07 IST)
வில்லன் என்றாலே பிரச்சனை கொடுப்பவர்தான். அயன் வில்லன் அனைவருக்குமே பிரச்சனையாகியிருக்கிறார்.

அயனில் சூர்யாவுடன் மோத இந்தியிலிருந்து ஆகாஷ் தீப் சைகல் என்பவரை இறக்குமதி செய்திருக்கிறார் கே.வி. ஆனந்த். சைகல் வட இந்தியாவை தவிர வேறு எங்கும் நகர்ந்திருக்கமாட்டார் போல, இந்திய தவிர எந்த மொழிக்கும் சைகலின் நாக்கு வளையவில்லை.

திருவல்லிக்கேணியில் நடந்த படப்பிடிப்பில் கதை வசனகர்த்தாவான சுபா (சுரேஷ், பாலா) சைகலுக்கு இந்தியில் தமிழ் வசனங்களை சொல்லிக்கொடுக்க, கரும்பு ஜூஸ் மெஷினாக வார்த்தைகளை கடித்து சக்கையாக துப்பிக் கொண்டிருந்தார் சைகல். ஒரு முழுநாள் போராட்டத்தில் சைகல் பேசிய ஒரே வசனம், 'அவனால என்னை ஒண்ணும் பண்ண முடியாது!'

ஷூட்டிங் முடிந்த பிறகு வசனகர்த்தாவும் இதே வசனத்தை புலிம்பியதாக கேள்வி.

Share this Story:

Follow Webdunia tamil