Publish Date: Thu, 08 May 2008 (20:54 IST)
Updated Date: Thu, 08 May 2008 (20:54 IST)
நேற்று மாலை ஏ.வி.எம். ஏசி திரையரங்கில் பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழா. சந்தியா, தனுஷ், பேரரசு, பரத் உள்ளிட்ட திரைப் பிரபலங்களுடன் படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ், நாயகி சினேகாவும் மேடையில் ஆஜர்.
அரைமணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை படத்தின் இன்னொரு நாயகி நமீதா. படத்தின் பாடல் கேசட்டை தனுஷ் வெளியிட சந்தியா பெற்றக்கொண்டார். சி.டி. யை பரத் வெளியிட பெற்றுக் கொண்டவர் இயக்குநர் பேரரசு.
விழாவில் பேசியவர்கள் இன்ச் டேப் வார்த்தைகளில் பேசியது பாராட்டத்தக்கது. படத்திலிருந்து இரண்டு பாடல்களை ஒளிபரப்பினார்கள். மாசி மாசம் ஆளான பொண்ணு ரீ-மிக்ஸ் பாடலில் சினேகா காட்டியிருப்பது கவர்ச்சிக் கடல். ஏசி திரையரங்கே வியர்த்துப் போனது.
லாரன்ஸ் நடத்தும் அறக்கட்டளைக்கு படத்தின் தயாரிப்பாளர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். படத்தின் இயக்குநர் இராகமதுரவன் அனைவரையும் வரவேற்றார்.