Publish Date: Thu, 01 May 2008 (19:44 IST)
Updated Date: Thu, 01 May 2008 (19:43 IST)
இலியானா தெலுங்கில் இப்போது ரொம்ப பிஸி. இவர் நடித்து சமீபத்தில் வெளியான ஜல்சா, பலே தொங்கலு படங்கள் பெரும் வெற்றியைத் தேடித் தந்துள்ளன. இடையிடையே இலியானா தமிழில் நடிக்கப் போகிறார் என்ற தகவலும் அதற்கான முயற்சிகளும் நடந்தன.
விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடிப்பதாகக் கூடத் தகவல்கள் வந்தன. ஆனால் இலியானாவோ கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமானபோதும், இனி ஒருபோதும் தமிழில் நடிக்க மாட்டேன் என்கிறார்.
கேடி படத்தில் நடித்தபோது படத்தில் நடித்தபோது தனக்குக் கிடைத்த மோசமான அனுபவமே போதும். இனி தமிழ் சினிமா பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டேன் என்கிற இலிக்கு தெலுங்கு இயக்குநர்களுடன் பணியாற்றுவதுதான் பிடிச்சிருக்காம்.
சமீபத்திய வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்தியுள்ள அம்மணிக்கு பந்தியில் இடமில்லை இலை கிழிஞ்சிருக்குன்னானாம் ஒருத்தன் என்ற பழமொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.