Publish Date: Tue, 29 Apr 2008 (19:28 IST)
Updated Date: Tue, 29 Apr 2008 (19:28 IST)
கமலுக்கு அடுத்தபடியாக வித்தியாசமான கேரக்டர்களை செய்வதில் சூர்யாவுக்கு நிச்சயமாக ஒரு இடமுண்டு. அந்த வகையில் சூர்யா சூப்பர் மேனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது.
அஞ்சாதே வெற்றிக்குப் பின் மிஷ்கின் இயக்கி நடிக்கவிருக்கும் படம் 'நந்தலாலா'. நந்தலாலாவுக்குப் பிறகு சூப்பர்மேன் கதையில் கவனம் செலுத்தவுள்ளார் மிஷ்கின்.
"சூப்பர்மேன் கதையை முதன் முதலாக தமிழில் படமாக்க திட்டமிட்டுள்ளேன். அஞ்சாதே வெற்றி கொடுத்த மகிழ்ச்சி என்னை அடுத்தடுத்த படங்களை செய்ய வைத்துள்ளது. நந்தலாலாவுக்குப் பின் நான் இயக்கப் போகும் சூப்பர்மேன் கதைக்கு ஏற்றவராக என் எண்ணத் திரையில் தோன்றியவர் சூர்யாதான்.
அதுபற்றி அவரோடு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. காலமும், களமும் அமைந்தால் தமிழ் ரசிகர்களுக்கு அந்தப் படம் நிச்சயம் ஒரு விருந்தாய் அமையும்" என்றார் மிஷ்கின்.