Publish Date: Mon, 21 Apr 2008 (14:59 IST)
Updated Date: Mon, 21 Apr 2008 (14:59 IST)
ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அவரது வீட்டுக் கதவை தட்டும் தயாரிப்பாளர்கள் அன்று முதல் இன்று வரை இருந்து கொண்டுதான் இருக்கிறார்க்ள.
பரத்துக்கு 'காதல்' வெற்றிக்குப் பின் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப்பின் நடித்த சில படங்கள் சரியாகப் போகாத நிலையில், சும்மா இருந்தவருக்கு தற்போது ஓடிக் கொண்டிருக்கும் படம் பழனி மூலம் பல படங்களைப் பெற்றுத் தந்துள்ளது.
பழனி பட டைட்டில் கீழே கமர்சியல் பஞ்சாமிர்தம் என்று சொன்னது போல் கமர்ஷியலாக வெற்றி பெற்றுவிட்டது.
அதன் வெற்றியின் காரணமாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் 'ஆறுமுகம்'. மீண்டும் ஷக்தி சிதம்பரம் தயாரிக்க, பேரரசு இயக்கும் 'திருத்தணி'. படப்பிடிப்பு முடியும் தருவாயில் 'எம்மகன்' பட இயக்குனர் திருமுருகன் இயக்கும் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' ஆகிய படங்கள் மட்டுமல்லாமல் ஷங்கரின் உதவி இயக்குனர் இயக்கும் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் பரத்.