Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உசிலம்பட்டி காதல் கதை!

உசிலம்பட்டி காதல் கதை!
, வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (16:50 IST)
பிரசாந்த், ரம்பா நடிப்பில் வெளிவந்த பூமகள் ஊர்வலம் படத்தை இயக்கியவர் மதுரவன். படம் வெற்றி என்றாலும் மதுரவனுக்கு மறுவாழ்வு கிடைக்க இத்தனை வருடங்களாகிவிட்டது.

பெயரை கதாமதுரவன் என மாற்றி, மதுரவன் இயக்கிய பாண்டி அனேகமாக பூசணிக்காய் உடைக்கும் நிலைக்கு வந்துள்ளது.

உசிலம்பட்டியில் நடக்கும் காதல் பிளஸ் ஆக்சன் கதையிது. வாய்ப்பில்லாதவன் வாத்தியாராவான். பொழைப்பில்லாதவன் போஸீலாவான் என்பது சொலவடை. வாத்தியார் பையன் லாரன்ஸ். போலீஸின் பெண் சினேகா. இவர்களுக்குள் காதல். தோழியாக நமிதா.

ஒரு பாடல் காட்சியை மட்டும் எடுத்தால் படம் தயாராகிவிடும். மே மாதம் பாமண்டியை திரைக்கு கொண்டுவரும் முயற்சிகள் நடக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil