Publish Date: Tue, 15 Apr 2008 (16:37 IST)
Updated Date: Tue, 15 Apr 2008 (16:36 IST)
திருநங்கைகளை (அரவாணிகள்) தொட்டுக் கொள்ளும் ஊறுகாயாகவே தமிழ் சினிமா பயன்படுத்தி வந்திருக்கிறது.
பருத்தி வீரனிலும் அவர்கள் விளிம்புநிலை பாலியல் தொழிலாளர்கள் என்ற ஒரேயொரு அடையாளத்துடனே காட்சிப்படுத்தப்பட்டிருந்தார்கள்.
இந்த இறுக்கமான சூழ்நிலையில் உதவி இயக்குனராக புணிபுரிகிறார் ஒரு திருநங்கை. அவர் பெயர் வித்யா. இணையதளத்தில் இவர் எழுதிய பருத்தி வீரன், பச்சைக்கிளி முத்துச்சரம் படங்களின் விமர்சனங்கள் மிகப் பெரிய பிரபலம்.
டி.சி. சிவகுமாரின் பால் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிகிறார் வித்யா. பால் திருநங்கைகளைப் பற்றிய படமாம்.
மூன்றாம் பாலினரான திருநங்கைகளின் திரையுலகப் பிரவேசம், வரவேற்கப்பட வேண்டியதுடன் ஊக்குப்படுத்தப்பட வேண்டிய ஒன்றுமாகும்!