Publish Date: Wed, 09 Apr 2008 (19:28 IST)
Updated Date: Wed, 09 Apr 2008 (19:28 IST)
கதை பிடித்திருந்தால், என்னுடைய கேரக்டர் திருப்தியளித்தால் எந்தப் படத்திலும் நடிப்பேன்! இப்படி ஸ்ரீகாந்த் வாய் திறந்து சொல்லவில்லை. தனது செயலால் சொல்லியிருக்கிறார்.
மதுமிதா இயக்கியிருக்கும் வல்லமை தாராயோ படத்தில் பார்த்திபன் நாயகன். சிறிய வேடமொன்றில் ஸ்ரீகாந்தும் நடித்துள்ளார். பூ, இந்திர விழா, அவள் உள்ளத்தை என கை நியை படங்கள் இருக்கும்போது ஏன் கெளரவ வேடம்?
கொஞ்ச நேரமே வந்தாலும் பெயர் சொல்லும்படியாக கேரக்டராம். அதனால் மதுமிதா கதையை சொன்னதும் மறுக்காமல் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த்.
படம் மே மாதம் திரைக்கு வருகிறது.