Publish Date: Tue, 08 Apr 2008 (19:20 IST)
Updated Date: Tue, 08 Apr 2008 (19:20 IST)
தென்னிந்திய டி.வி. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராதிகா, சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.
தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றும் லைட்மேன்களுக்கு சம்பள உயர்வு குறித்து பெப்சி மற்றும் சின்னத்திரை சங்கங்களுடன் டி.வி. தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சினி டெக்னிஷியன் யூனியனைச் சேர்ந்த சிலர், ராடான் தயாரிக்கும் தொலைக்காட்சித் தொடர் மற்றும் பிரமிட் சாய்மீராவின் சிம்ரன் திரை படப்பிடிப்புத் தளங்களில் அத்துமீறி நுழைந்தனர். கேமரா ஒயர்களை பிடுங்கி எரிந்ததுடன் கேமரா உதவியாளரையும் தாக்கினர். இதுகுறித்து சங்க நிர்வாகிகளுடன் சென்று கமிஷனரிடம் புகார் தெரிவித்தார் ராதிகா. பிறகு தமிழக முதல்வரை சந்தித்து புகார் கொடுத்தார்.
புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த முதல்வர், இன்று ஒரு நாள் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று மட்டும் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.