Publish Date: Fri, 04 Apr 2008 (18:26 IST)
Updated Date: Fri, 04 Apr 2008 (18:25 IST)
தளிர் போலிருக்கும் சிலருக்கு குரல் தகரம் போலிருக்கும். ப்ரியாமணிக்கு பிசிறடிக்கும் குரல். கீச்சுக் குரலில் கத்தினால் காதில் கீறல் விழும்.
அழகும் குரலும் அம்சமாக பொருந்திய நடிகை சினேகா. பிரிவோம் சந்திப்போம் படத்தில் காதில் தேனை பாய்ச்சிய குரல் சினேகாவுடையது. ஆம், பிரிவோம் சந்திப்போம் படத்தில் சினேகாவே டப்பிங் பேசினார்.
கதாகமதுரவனுக்கு காதில் தேன் பாய்வதில் விருப்பமில்லையோ என்னவோ. தனது பாண்டி படத்தில் சினேகாவுக்கு பதில் தீபா வெங்கட்டை டப்பிங் பேச வைத்திருக்கிறார்.
சொந்தக் குரலில் டப்பிங் பேசினால் மட்டுமே விருது போட்டியில் கலந்துகொள்ள முடியும். பாண்டியை பொறுத்தவரை சினேகாவுக்கு விருது கிடைக்கும் நம்பிக்கை இல்லை போலும்.