Publish Date: Mon, 24 Mar 2008 (18:11 IST)
Updated Date: Mon, 24 Mar 2008 (18:10 IST)
அருண் விஜய், ஷீலா நடித்திருக்கும் வேதா படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார், படத்தின் தயாரிப்பாளரான வாசு பாஸ்கர். படத்தை தயாரித்திருப்பதுடன் கதை, திரைக்கதையையும் இவரே எழுதியிருக்கிறார்.
வேதா கதை சிங்கப்பூரில் நடந்த உண்மைச் சம்பவம். சம்பவத்தின் பிரதான நபர் வாசு பாஸ்கரின் நண்பர். படம் வெளியான பிறகு, தனது நண்பரை மீடியாவுக்கு அறிமுகப்படுத்தப் போகிறாராம்.
வதேவுடக்கு சவனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.நித்திய குமார். தமிழக கவர்னர் பர்னாலாவின் பேரன் ஜெரோவதன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
அண்ணன் தனது மனைவியை தம்பிக்கு தாரை வார்க்கும் வில்லங்கமான கதை வேதா என்றொரு வதந்தி கோடம்பாக்கத்தில் உலவுகிறது. படத்திற்கு ஏ சான்றிதழே கிடைக்கும் என சிலர் பெட் கட்டி காத்திருக்க யு சான்றிதழ் கொடுத்து கரி பூசியிருக்கிறது தணிக்கைக் குழு.
யு சான்றிதழ் கிடைத்த உற்சாகத்தில் வரும் 28ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறார் வாசு பாஸ்கர். அவரே சொந்தமான வெளியிடுகிறார் என்பது முக்கியமான விஷயம்.