Publish Date: Mon, 17 Mar 2008 (14:34 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:06 IST)
பூஜை போடும் அன்றே படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் ஒரே நிறுவனம் ஏவி.எம்.. அவர்களின் துல்லியமான இந்த திட்டமிடலுகூகு தூணாக இருப்பவர்கள் தொழிலாளர்கள்.
சிவாஜி பட வேலைகள் இரண்டு வருடம் நடந்தது. இரண்டு வருடமும் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வதர்கள் ஏவி.எம். ஊழியர்கள். அவர்கள் சேவைக்கு சிகரம் வைப்பது போல், தனது ஊழியர்கள் ஒவ்வொருவருகூகும் (மொத்தம் 347 பேர்) சம்பளத்துடன் 25,000 ரூபாய் இனாமாக அளித்திருக்கிறது ஏவி.எம்..
எத்தனையோ விஷயங்களுக்கு மெய்யப்ப செட்டியாரின் மூன்றெழுத்து நிறுவனம் முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. லாபத்தை பகிர்ந்து கொள்வதிலும் முதலாளி, தொழிலாளி எல்லையை ஏவி.எம். அழித்திருக்கிறது.
ஏவி.எம்.தான் தி ரியல் பாஸ்!