Publish Date: Sat, 15 Mar 2008 (13:44 IST)
Updated Date: Sat, 15 Mar 2008 (13:44 IST)
தமிழ்நாட்லுள்ள அனைத்து ஊர்களின் பெயர்களையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறார் இயக்குனர் பேரரசு. நாகப்பட்டினம் என்ற பெயரில் இவர் படம் இயக்குவதாக இருந்தது. நாகப்பட்டினம் பெயர் பேரரசுக்கு பிடிக்கவில்லை போல பெயரை திருத்தணி என்று மாறிறியிருக்கிறார்.
பழனியில் சின்ன தளபதியாக பிரமோஷன் பெற்ற பரத், திருத்தணியின் ஹீரோ. அனேகமாக பேரரசே படத்தை தயாரிக்கலாம். படத்துக்கு இசையமைக்கும் ஆசையும் பேரரசுக்கு உள்ளது.
பழனி, திருத்தணி என்று முருகனுக்கு பிடித்த இடங்களின் பெயராக வைக்கிறார். அடுத்தப்படம் என்ன, திருப்பரங்குன்றமா?