Publish Date: Tue, 26 Feb 2008 (17:07 IST)
Updated Date: Tue, 26 Feb 2008 (17:05 IST)
தேர்தல் கமிஷன் இருப்பதே டி.என். சேஷனுக்கும் பிறகுதான் தெரியும். அந்த மாதிரி கலை இயக்கம் என்பதை இந்தியாவுக்கு தெரியப்படுத்தியவர் பத்மஸ்ரீ விருது பெற்ற தோட்டாதரணி.
நாயகன் படத்தின் தாராவி சேரிப் பகுதி, சென்னையில் இவரது கைவண்ணத்தில் உருவானதூன். சிவாஜியின் கண்ணாடி மாளிகை, விண்ணை முட்டும் அரண்மனை என்று இவரது சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்தியாவின் முன்னணி இயக்குனர்களுடன் பணிபுரிந்திருக்கும் தோட்டாதரணி தனது அனுபவங்களை தொகுத்து புத்தகமாக கொண்டு வருகிறார். சினிமாவில் நம் கண்ணுக்கு தெரியாத விஷங்களை வெளிக்கொண்டு வருவதாக இந்தப் புத்தகம் இருக்குமாம்.
தனது ஓவியங்களை தொகுத்து அதையும் புத்தகமாக்கும் எண்ணமும் இந்த தேசிய விருதுபெற்ற கலை இயக்குனருக்கு இருக்கிறது.