Publish Date: Wed, 02 Jan 2008 (11:17 IST)
Updated Date: Wed, 02 Jan 2008 (11:17 IST)
ஆல்பம் படத்தை தொடர்ந்து விருதுநகர், வெயிலையும் வெட்கையையும் வெளிச்சம் போட்டுக்காட்டி கேன்ஸ்வரை தமிழ் சினிமாவை கொண்டு போன இயக்குனர் வசந்தபாலன் அடுத்து திருநெல்வேலி பின்புலத்தில் வைத்து அடுத்த படமான அங்காடி தெரு கதையை சொல்லப்போகிறார்.
இளவட்ட காதல் கதையாம்.அதற்காக தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் அத்தனைக்கும் போய் கடைசியாக தன ஹீரோவை கண்டுபிடித்திருக்கிறார்.
அதுவும் எங்கே தெரியுமா? பாலாஜி சக்திவேல் கல்லூரி ஹீரோவை கண்டுபித்த அதே திண்டுக்கல்லில்தான் இந்த ஹீரோவை செலக்ட் பண்ணியிருக்கிறார்.
இன்னொரு ஆச்சர்யம் இவரும் ப்ளஸ் டூ மாணவர்தான். ஹீரோயினாக நடிப்பது யார் என்பதான் இன்னும் முடிவாகவில்லை.