Publish Date: Fri, 07 Dec 2007 (11:56 IST)
Updated Date: Fri, 07 Dec 2007 (11:55 IST)
கல்லூரி,மயிலு என புமுகங்கள் நடிக்கும் படங்களுக்கு தமிழில் இப்போது ஏகப்பட்ட வரவேற்பு.
அதனால் அந்தமாதிரி கதை சொல்லும் இளைஞர்களுக்கு கோடம்பாக்கத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
அந்த வரிசையில் கதை சொல்லி இன்னொரு படத்துக்கு வாய்ப்பு வாங்கிவிட்டார் இயக்குனர் சுரேஷ்.
யாரது என்கிறீர்களா!? கம்பீரம், நம்நாடு என்று சரத்குமாரை வைத்து இரண்டு படங்கள இயக்கியவர்.
இரண்டாவது படம் சரியாக போகவில்லை என்றாலும் இவர் சொன்ன அவுட்லைன் பிடித்துப்போக உடனடியாக அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தயாரிப்பாளர்.
இப்போது மூணாறு ஏரியாவில் தீவிர டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது.