Publish Date: Fri, 23 Nov 2007 (12:56 IST)
Updated Date: Fri, 23 Nov 2007 (12:56 IST)
படம் இயக்குகிற வேலையில் இயக்குனர் லிங்குசாமி பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் படத்தயாரிப்பு வேலைகளையும் பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக இதுவரை இயங்கிவந்த கே.கே.நகர் அலுவலகத்தை ஆழ்வார்திருநகர் ஏரியாவுக்கு மாற்றியிருக்கிறார்.
தவிர..இதுவரை வாடகை கட்டடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. இந்த முறை மூன்றுகோடி ரூபாய்க்கு வாங்கி சொந்தமாக போட்டிருக்கிறார்.
இயக்குனர் ஷங்கர் அலுவலகத்துக்கு அடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் ஹைடெக் அலுவலகம் இதுதான்!