Publish Date: Mon, 12 Nov 2007 (11:37 IST)
Updated Date: Mon, 12 Nov 2007 (11:37 IST)
ஏற்கனவே நமது தேசிய கீதத்தை தனது இசையால் உலகம் முழுக்க கொண்டுபோய் சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
உலகம் முழுக்க இசையமைப்பு ஆல்பம் என்று பறந்து கொண்டிருக்கும் ரஹ்மானை அழைத்து வந்து ஒரே இடத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் உட்காரவைத்து சாதனை செய்தார் இயக்குனர் தயாரிப்பாளர் ஷங்கர்.
கல்லூரி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இந்த அதிசயம் நடந்தது. படத்தின் பாடலை ஷங்கரே தனது எஸ் மியூசிக் மூலம் வெளியிட்டார். விழாவுக்கு வந்த அத்தனை பேரும் படத்தைப் பற்றியும் ஷங்கர் பற்றியும் பாராட்டிவிட்டுப்போக...
பாரட்டிப்பேச வந்த இயக்குனர் பாலுமகேந்திரா தனது பேச்சுக்கு நடுவே ரஹ்மானுக்கு ஒரு கோரிக்கை வைத்து விட்டுப்போனார்.
அந்த கோரிக்கை என்ன? தமிழ்த்தாய் வாழ்த்தை ஏ.ஆர்.ரஹ்மான் தன்னோட இசையின் மூலம் புதுவடிவம் கொடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
ஏற்கனவே அதுபோல் வந்துவிட்டது என்று யாரோ சொல்ல...அதனால் என்ன...ரஹ்மான் இசையில் வருவது இன்னும் ஸ்பெஷலாக இருக்கும் என்று சொல்லிவிட்டுப்போனார். உண்மைதானே!