Publish Date: Thu, 11 Oct 2007 (16:13 IST)
Updated Date: Thu, 11 Oct 2007 (16:13 IST)
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் ஜீவன் இயக்கும் படம் மயிலு.
உசிலம்பட்டி ஏரியாவை சுத்தித்தான் மொத்த படப்பிடிப்பும் நடக்கிறது. உசிலம்பட்டியிலிருந்து திருமங்கலம் போகிற வழியில் சோனைமுத்து சாமி கோவிலில் ஒரு பாடல் காட்சியை நேற்று படமாக்கியிருக்கிறார்கள்.
பொதுவாக அந்த ஏரியாவில் புரட்டாசி மாதங்களில் கோவில் திருவிழா எக்கச்சக்கமாக நடக்கும்.
அப்படித்தான் திருவிழா நடக்குதென்று ஊர்க்காரர்கள் அத்தனைபேரும் கோவிலில் கூடிவிட்டார்களாம்.
ஒரிஜினல் திருவிழா மாதிரியே பாடல் காட்சியை எடுத்திருப்பதாக யூனிட் ஆட்கள் அத்தனைபேரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்!