இயக்கத்தை மறந்த சுந்தர்.சி
Publish Date: Thu, 11 Oct 2007 (12:54 IST)
Updated Date: Thu, 11 Oct 2007 (12:54 IST)
சுந்தர்.சி இனிமேல் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்னவோ? அந்த அளவிற்கு நடிப்பதற்கான வாய்ப்பு இடைவெளியில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தற்போது ஆயுதம் செய்வோம், தீ, மகாமகம் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஹெச். முரளி தயாரிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். அதேபோல் பாச்சு என்பவர் தயாரிப்பில் இன்னொரு படம் நடிக்கிறார். வீராப்பு படத்தை இயக்கிய பத்ரி இந்த படத்தை இயக்குகிறார்.