Publish Date: Fri, 21 Sep 2007 (16:11 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:22 IST)
பாலச்சந்தர் மற்றும் பஞ்சு அருணாச்சலம் தயாரிக்க திட்டமிட்டிருக்கும் ரஜினி படத்திற்கு கே.எஸ். ரவிக்குமாரை இயக்க கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு ரவிக்குமார் கொஞ்சம் யோசிக்கிறாராம்.
ஏற்கனவே ஜக்குபாய் படத்திலிருந்து தன்னை கழட்டிவிட்டு பி. வாசுவுக்கு அந்த வாய்ப்பை ரஜினி கொடுத்ததால் அவர் மீது வருத்தமாக இருக்கிறாராம் ரவிக்குமார்.
அதைவிட தன் நண்பர் சரத்குமாரை வைத்து அவர்களுடைய ராடன் டி.வி.க்காக ஒரு படத்தை இயக்கிக் தருகிறேன் என்று ஒப்பந்தம் செய்திருக்கிறாராம்.
தசாவதாரம் முடிந்ததும் சரத்குமார் படத்திற்கு போகலாம் என்றிருந்தவருக்கு ரஜினி பட அழைப்பை ஏற்கத் தயக்கமாக இருக்கிறதாம். அதனால் இன்னும் முடிவு சொல்லாமல் இருக்கிறாராம் ரவிக்குமார்.