Publish Date: Thu, 13 Sep 2007 (12:28 IST)
Updated Date: Thu, 13 Sep 2007 (12:27 IST)
இப்போது இருக்கும் ஹீரோக்களில் மிக விபரமானவராக இருக்கிறார் விஷால். பெரும்பாலும் தங்களுடைய சொந்த கம்பெனியில் மட்டுமே நடிக்கத் தயாராக இருக்கிறார்.
வெளி கம்பெனிகளிலிருந்து யாராவது நடிக்க கூப்பிட்டால் சம்பளமாக 5 கோடி கேட்கிறாராம். 5 கோடியா என்று வாயை பிளந்தால் தமிழில் பெரிய ஆக்சன் ஹீரோவாக இருக்கிறேன்.
நான் நடிக்கும் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டால் வசூல் குவியும். அதற்கு இந்த சம்பளம் கொடுக்கக் கூடாதா என்கிறாராம். அதோடு தன் பேருடன் புரட்சி தளபதி என்று போட வேண்டும் என்று கட்டளையிடுகிறாராம்.