அமீர்கானின் சத்யாவேசத்தின் உண்மை முகம்
Publish Date: Wed, 12 Mar 2014 (13:10 IST)
Updated Date: Wed, 12 Mar 2014 (13:08 IST)
சத்யமேவ ஜெயதே நாடகத்தின் இரண்டாவது ஷோ பரபரப்பான அறிமுகக் காட்சியுடன் ஆரம்பமாகியுள்ளது. போலீஸ், புகார் என்று இரண்டாவது பாகத்தில் கொஞ்சம் க்ரைமையும் சேர்த்துள்ளார் நடிகர் அமீர்கான்.
நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசுவதும், கேமராவின் முன் உணர்ச்சிவசப்படுவதும்தான் இந்த ஷோ-வின் பிரதான நிகழ்வு. அமீர்கான் அதையாவது செய்கிறார், நீ என்ன பிடுங்கினால் என்று சத்திய ஆவேசம் கொள்ளும் அன்பர்கள் சத்யமேவ ஜெயதே நாடகத்தின் முதல் பாகம் இந்தியாவில் என்ன மாற்றத்தை கொண்டு வந்தது என்பதை கூறினால் நலமாக இருக்கும்.நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் அதிகமானதும், அமீர்கானின் இமேஜ் உயர்ந்ததும்தான் சத்யமேவ ஜெயதே முதல் ஷோ-வின் சாதனை என்று சொன்னால் அதனை மறுக்க முடியுமா?யார் எந்தப் பிரச்சனையை பேசினாலும் அந்தப் பிரச்சனையை தீர்க்க வந்த பிதாமகனாக அவரை கருதுவது தவறான அணுகுமுறை. அவர் பேசுகிற பிரச்சனைக்கு அவர் எவ்வளவுதூரம் காரணமாக இருக்கிறார், அந்தப் பிரச்சனையை தீர்க்க அவர் எடுத்த முயற்சிகள் என்ன என்று பார்ப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
அம்பானிகளும், மற்ற கார்ப்பரேட்டுகளும்தான் இந்தியாவை ஆளுகிறார்கள், அவர்களின் ஆணைப்படியும் விருப்பப்படியுமே ஆளும் காங்கிரஸும், எதிரணியில் இருக்கும் பாஜக-வும் நடந்து கொள்கின்றன என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் அம்பலப்படுத்தினார். முகேஷ் அம்பானியின் மீது வழக்கு என்றவுடன் ஜென்ம விரோதிகளான காங்கிரஸும், பாஜக வும் கைகோர்த்துக் கொண்டன. இந்த கார்ப்பரேட்களின் செல்லப்பிள்ளைதான் அமீர்கான்.