Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் T20: முதல் முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா!

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (11:07 IST)
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா நுழைந்துள்ளது. 
 
மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது. 
 
இந்த போட்டியில் இரு அணிகளும் விளையாட தயார் நிலையில் உள்ள நிலையில் திடீரென கனமழை பெய்ததால் போட்டு துவங்குவதில் தாமதமானது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது. 
 
அங்கு மழை குறையாததால்  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி கைவிடப்பட்டுள்ளது. மேலும், குரூப் ஏ பிரிவில் புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதால் நேரடியாக இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 
 
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments