விளையாடுனா ஆர்சிபிக்கு மட்டும்தான் விளையாடுவேன்..! – விராட் கோலி உறுதி!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (09:19 IST)
நேற்றைய ப்ளே ஆஃப் போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்த நிலையில் ஆர்சிபிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடந்து வந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் முந்தைய போட்டியில் வென்று சிஎஸ்கே நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த ப்ளே ஆஃப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்டன.

முதலில் பேட்டிங் செய்திருந்த ஆர்சிபி 138 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சேஸிங்கில் இறங்கிய கொல்கத்தா அணி கடைசி ஓவருக்குள் 139 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. விராட் கோலி ஆர்சிபியின் கேப்டனாக பங்கேற்கும் கடைசி போட்டி இது.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேட்டியளித்த விராட் கோலி “இளைஞர்கள் நம்பிக்கையுடனும், முழு சுதந்திரத்துடனும் விளையாடுவதற்கு தேவையான சூழலை உருவாக்குவதற்கு நான் என்னால் முடிந்த சிறந்ததைக் கொடுக்க முயற்சித்துள்ளேன். என்னால் முடிந்த சிறப்பான எல்லாத்தையும் அணிக்காக செய்துள்ளேன். அணியின் கேப்டனாக 120 சதவீதம் என் திறனை வெளிப்படுத்தியுள்ளேன். இனி கேப்டனாக இல்லாவிட்டாலும் கிரிக்கெட் வீரராக ஆர்சிபிக்காக தொடர்ந்து விளையாடுவேன். ஐபிஎல்லில் உள்ளவரை ஆர்சிபிக்காக மட்டுமே விளையாடுவேன்” என உறுதியாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments