Publish Date: Mon, 28 Sep 2020 (13:37 IST)
Updated Date: Mon, 28 Sep 2020 (13:39 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ள நிலையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஆண்டின் ஐபிஎல் சீசனில் 10வதாக நடைபெறும் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. இரண்டு அணிகளுக்குமே இது இந்த சீசனின் மூன்றாவது போட்டி.
முன்னதாக நடந்த இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியடைந்துள்ளன. இந்த இரு போட்டிகளில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் 195 ரன்கள் சேஸ் செய்துள்ளது. ஆர்சிபி அதிகபட்சமாக 163 வரை சேஸ் செய்துள்ளனர். ஏற்கனவே சில ஆண்டுகள் முன்பாக இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்து கோலி – ரோகித் ஷர்மா இடையே போட்டி இருந்ததாக பேசப்பட்டு வந்தது.
இதனால் இந்த இருவர் தலைமையில் அணிகள் மோதிக்கொள்ளும் இந்த போட்டியை இருவருக்கும் இடையேயான போட்டியாகவே ரசிகர்கள் பாவித்து வருகின்றனர்.