Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேம்பியன் கோப்பையை கோயிலில் வைத்து சிஎஸ்கே நிர்வாகம் சிறப்பு பூஜை

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (20:01 IST)
ஐபிஎல் -2023, 16 வது சீசன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை கிங்ஸ் அணி வீரர்கள் இன்று  சென்னை வந்தடைந்த நிலையில், வெற்றிக் கோப்பையை கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி  நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள  நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

இதில், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   5வது முறையாக  வென்றது.

எனவே சென்னை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  இந்த நிலையில், வெற்றிக் கோப்பையுடன் இன்று சென்னை கிங்ஸ் அணி வீரர்கள்  மதியம் சென்னை வந்தடைந்தனர். இவர்களுக்கு விமான  நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐபிஎல்- போட்டியில் சென்னை கிங்ஸ் அணி வென்ற சாம்பியன் பட்டத்தை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் கோப்பையை வைத்து சிஎஸ்கே நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்தனர்.

இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments