Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாம் போராட்டம் எதிரொலி! – கிரிக்கெட் போட்டி ரத்து!

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (12:14 IST)
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டத்தின் எதிரொலியாக கிரிக்கெட் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாஜக மத்திய அரசு இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்ததால் அசாம் மற்றும் திரிபுரா பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனால் அசாம் மற்றும் திரிபுராவில் நடைபெறவிருந்த ராஞ்சி கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போட்டிகள் மீண்டும் நடைபெற இருக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments