Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்: ரவுண்டு கட்டும் ரோகித்!

Advertiesment
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்: ரவுண்டு கட்டும் ரோகித்!
, புதன், 11 டிசம்பர் 2019 (19:19 IST)
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது டி20 தொடர் மும்பையில் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு டி20 தொடர்களில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்றதால் ஆட்டம் சமநிலையில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அதுதான் டி20 தொடரில் வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.

இந்நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்ற ஆட்டத்தில் பந்து வீச்சு தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் எளிதில் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்ரேட்டை குறைத்தது. அதே முறையில் இந்த தடவையும் வெற்றிபெற உத்தேசித்திருப்பதாக தெரிகிறது. ஆனால் போன முறை போல அல்லாமல் இந்த முறை இந்தியா சிறப்பான ஆட்டத்தையே வழங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

யாருக்கு வெற்றி என்பதை முடிவு செய்யும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே இந்த ஆட்டம் குறித்த எதிர்பாப்பு அதிகரித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மண்ணிலேயே இந்தியா ஒயிட் வாஷ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தவான் விலகல்: மயங்க் சேர்ப்பு!