Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு…பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (11:59 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது.

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இமெயிலுக்கு ”இந்திய அணி கண்டிப்பாக தாக்கப்படும்” என மெயில் வந்துள்ளது. உடனே இந்த மெயிலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு அனுப்பியது. மிரட்டல் விடுத்தது எந்த பயங்கரவாத அமைப்பு என தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

பின்பு இந்த தகவல், பிசிசிஐ க்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ சி.இ.ஓ ராகுல் ஜோரி, அந்த இமெயிலில் இந்திய வீரர்கள் கொல்லப்படுவர் என குறிப்பிட்டிருந்தது. அந்த இமெயிலை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளோம் என கூறினார்.

இந்த இமெயில் குறித்து ஐசிசியிடமிருந்து எந்த பதிலும் தற்போது வரை வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த இமெயிலை குறித்து பிசிசிஐயை சேர்ந்த சிலர், இமெயிலைப் படித்து பார்த்தால் இது பயங்கரவாத அமைப்பிடமிருந்து வந்தது போல் தெரியவில்லை. இதனால் இந்திய அணிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

அடுத்த கட்டுரையில்
Show comments