இன்று தொடங்குகிறது முதல் டெஸ்ட் போட்டி.. இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம்?

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (08:22 IST)
பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்க உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி ஒன்பதாம் தேதியும், இரண்டாவது பிப்ரவரி 17ஆம் தேதியும் , மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதியும் நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அதனை அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று நாக்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய ஆடும் லெவன் அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. சூர்யகுமார் யாதவ் இன்று டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகக் கூடும் என சொல்லப்படுகிறது. பண்ட் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் கே எல் பரத் விக்கெட் கீப்பராக அணியில் இடம்பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments