Publish Date: Tue, 07 Feb 2023 (16:34 IST)
Updated Date: Tue, 07 Feb 2023 (16:41 IST)
ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள புத்த கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள, தென்கிழக்கு மாகாணம் விக்டோரியாவின் தலை நகர் மெல்போர்னில் பிரபல புத்த கோவில் ஒன்று உள்ளது.
இந்த புத்த கோவில் 32 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோவில் பிரபல கோவில் தலமாக அந்த நாட்டில் உள்ளது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் இந்தக் கோவியில் இரவு நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீவிபத்தில் 80 க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பல மணி போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இதுகுறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.