Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றம் நாள் ஆட்டம் தொடங்கியதுமே விக்கெட்டை இழந்த இந்தியா…!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (15:18 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேஎ நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமாக சதமடித்து அணியை வலுவான ஸ்கோர் நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து ஆடிய இந்திய அணி இரண்டாம் நாளில் 5 விக்கெட்கலை இழந்து 151 ரன்கள் எடுத்தது. ரஹானே மற்றும் கே எஸ் பரத் ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கே எஸ் பரத் தன்னுடைய விக்கெட்டை மேற்கொண்டு ரன்கள் எதுவும் எடுக்காமல் ஸ்காட் போலண்ட் பந்தில் இழந்தார்.

தற்போது ரஹானே 33 ரன்களோடும், ஷர்துல் தாக்கூர் 8 ரன்களோடும் விளையாடி வருகின்றனர், இந்திய அணி 167 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments